தூத்துக்குடி, நவ.14: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் இன்று (14ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (14ம் தேதி) நடக்கிறது. இதனால் மீளவிட்டான், சின்னக்கண்ணுபுரம், பண்டாரம்பட்டி, அகில இந்திய வானொலி நிலையம், சிப்காட் வளாகம், கணேசன் நகர், ராஜீவ்நகர், மில்லர்புரம், மடத்தூர், பி.அன்ட்.டி.காலனி, ராஜகோபால்நகர், 3வது மைல், பத்திநாதபுரம், சங்கர்காலனி, எப்.சி.ஐ.குடோன், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், அமுதா நகர், ஆசிரியர் காலனி, பசும்பொன்நகர், சில்வர்புரம், கதிர்வேல்நகர், தேவகிநகர், கிருபைநகர், பால்பாண்டிநகர், அசோக்நகர், செல்சீனிகாலனி, கால்டுவெல் காலனி, வள்ளிநாயகிபுரம், 3 சென்ட், சிவந்தாகுளம் நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.