கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே தாமஸ்நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாமஸ்நகர் பகுதியில் உடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும். அத்துடன் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க வேண்டும். குண்டும் குழியுமாக காணப்படும் மணிக்கூண்டு ரோட்டை சீரமைக்க வேண்டும். வாறுகாலில் தேங்கும் கழிவுநீரை அவ்வப்போது அகற்ற வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தாமஸ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும்.