தமிழ் போன்று ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் பெயர் மாற்றம் கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி, நவ.14: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்று எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட ஆவணங்களின் அடிப்படையிலும், ஊர்ப் பொதுமக்களின் தீர்மானங்கள், கோரிக்கைகளின் அடிப்படையிலும், ஊர்ப் பெயர்களைப் பெறுவதற்கு கலெக்டர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையை செயற்படுத்தும் வகையில் ஊர் பொதுமக்கள், தமிழறிஞர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கில உச்சரிப்பும் அமையப்பெறாத ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: