தூத்துக்குடியில் வாலிபரை வெட்டிய தொழிலாளி கைது

தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர்கள் செட்டிபெருமாள் மகன் முனீஸ்வரன் என்ற நண்டால் (24), அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பழனி (28). இவர்கள் இருவரும், சங்குகுளி தொழிலாளிகள். நேற்று முன் தினம் இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனி, சமயலறையில் இருந்த கத்தியால் முனீஸ்வரன் கழுத்தில் வெட்டியுள்ளார்.  

இதில், பலத்த காயம் அடைந்த முனீஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார்  கொலை முயற்சி  வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: