தூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர்கள் செட்டிபெருமாள் மகன் முனீஸ்வரன் என்ற நண்டால் (24), அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பழனி (28). இவர்கள் இருவரும், சங்குகுளி தொழிலாளிகள். நேற்று முன் தினம் இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனி, சமயலறையில் இருந்த கத்தியால் முனீஸ்வரன் கழுத்தில் வெட்டியுள்ளார்.