முன்னணி தீயணைப்பாளர் 4 பேருக்கு பதவிஉயர்வு

புதுச்சேரி, நவ. 13: புதுவை தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்பாளர்கள் 4 பேருக்கு தீயணைப்பு நிலைய அதிகாரியாக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னணி தீயணைப்பாளர்கள் நாராயணன் (திருபுவனை), பக்கிரி (பாகூர்), மாரிமுத்து (காரைக்கால்), பாலவேலன் (சேதராப்பட்டு) ஆகியோர் தாங்கள் பணிபுரியும் தீயணைப்பு நிலையங்களுக்கு நிலைய அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

பதவி உயர்வை வழங்கியதையொட்டி அரசுக்கு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்

Related Stories: