தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, நவ. 13: புதுவை,   செயின்ட்பால் பேட்டையைச் சேர்ந்தவர் மகிமைதாஸ், கட்டிட தொழிலாளி. இவரது   மனைவி சரோஜா, வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் அஜித்குமார்   (18). தாகூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து  வந்தார்.   இவர் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியதாக   கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகிமைதாஸ் சொந்த வேலை   காரணமாக ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், சரோஜாவும் வழக்கம்போல் வீட்டு வேலைக்கு சென்றுள்ளர். பின்னர் மதியம் அவர் வீடு திரும்பிய நிலையில்,   அஜித்குமார் தனது புடவையில் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி  அழுதார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அஜித்குமாரை மீட்டு   சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை   பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.  இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா? என்பது தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: