அவசரகதியில் திறக்கப்பட்ட பூங்கா விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

பேரையூர், நவ. 12: டி.கல்லுப்பட்டி அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள சோலைபட்டி அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேனும், காரும் மோதி விபத்தானது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் பேரையூரைச் சேர்ந்த நாகூர்கனி(55) மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி நாகூர்கனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஐயப்ப சீசன் தொடங்க உள்ளதால் கூடுதல் கழிப்பறை வசதி தேவை ஐய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க உள்ளதால் பக்தர்களுக்கு கூடுதலாக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் மீனாட்சி அம்மன் கோயிலின் 5 ேகாபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உள்பட 5 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பனி காலம் தொடங்கி உள்ளதால் இரவு நேரங்களில் வாசலில் நிற்க கூட வசதிகள் இல்லாததால் பொலீசார் பெரும் சிக்கலில் தவித்து வருகின்றனர். கொசுக்கடி மற்றும் மழையில் சிக்கி பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு விடுமுறையில் செல்லும் நிலையும் உருவாகி உள்ளது. இதனால் போலீசாருக்கு வாசலில் தற்காலிக செட் அமைத்து கொடுக்க வேண்டும்.

Related Stories: