தீ விபத்தில் பட்டாசு கடை பழைய பேப்பர் குடோன் நாசம்

திருச்சி, நவ. 8: திருச்சியில் தீ விபத்தில் பட்டாசு கடையும், பழைய பேப்பர் குடோனும் எரிந்து நாசமாயின.திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார்ராஜா (53). இவர் வாலாஜா சாலையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் தீபாவளி பண்டிகையொட்டி ஒவ்வொரு வருடமும் அனுமதி பெற்று கடந்த 25 வருடங்களாக பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தாண்டு போலீஸ் அனுமதியுடன் கடை முன் பட்டாசு கடை நடத்தினார். முன்னதாக கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களை மாற்று இடத்தில் வைத்து பின்னர் பட்டாசு வியாபாரம் நடத்தினார். இதில் கடந்த 5ம் தேதி இரவு பட்டாசு வியாபாரம் பரபரப்பாக நடந்தது. அதிகாலை 4.30 மணியளவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய பின், கடையை பூட்டும் போது திடீரென மீதமிருந்த பட்டாசுகளில் திடீர் என தீப்பிடித்தது. இதையடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. மேலும் கடை உள்ளே இருந்த அட்டை பெட்டிகள், பிவிசி பைப்கள் உள்ளிட்டவைகள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். உறையூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்த போது மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. ஆனாலும் கடையில் இருந்த ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் தீக்கிரையானது.

Related Stories: