அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி, நவ.8: திருச்சி தென்னூர் ஜாகீர்உசேன் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் திருச்சி கோட்டத்தில் டவுன் பஸ் டிரைவராக உள்ளார். நேற்றுமுன்தினம் தீபாவளியன்று இவரது பஸ்சில் 2 பேர் ஏறியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசாமிகள் 2 பேரும் பஸ்சில் ரகளை செய்து வந்தனர். தில்லைநகர் அருகே வந்தபோது பஸ் டிரைவர் அப்துல்ரகுமான் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆசாமிகள் டிரைவர் அப்துல்ரகுமானை தாக்கினர். இதனால் தில்லைநகர் காவல்நிலையம் முன் பஸ்சை நிறுத்திவிட்டு புகார் அளித்தார். வழக்கு பதிந்த எஸ்ஐ கீதா, டிரைவரை தாக்கிய தென்னூர் ஜீவா நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (22), தென்னூர் வாமடத்தை சேர்ந்த அருணாசலம் (23) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: