தஞ்சை, நவ. 8: தஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் காவலர்களை வரவேற்பாளர்களாக நியமனம் செய்வது மற்றும் அவர்களது பணிகள் குறித்து விளக்க கூட்டம் நடந்தது. எஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தல் தலைமையக கூடுதல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், பணியிடை பயிற்சி மைய துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் நிலையத்தில் வரவேற்பாளர்களாக பணிபுரியும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விரிவுரையாளர்கள் பங்கேற்று வரவேற்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.