தஞ்சை, நவ. 8: தஞ்சை அருகே அம்மாப்பேட்டை மார்வாடி தெருவை சேர்ந்த மகேஷ்வரன் மகன் விவேக், சாந்திநகரை சேர்ந்த சிவானந்தம் மகன் கிருபாகரன், திருமலைநகரை சேர்ந்த சிவானந்தம் மகன் செல்வகுமார் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, நெய்குன்னம் பகுதி வெண்ணாற்றில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம், எம்பி பரசுராமன், கலெக்டர் அண்ணாதுரை, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், அம்மாப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சூரியநாராயணன், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ் உடனிருந்தனர்.