×

பண்ணைக்குள் புகுந்து கோழி திருட்டு தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்; 6 பேர் கைது

சிங்கம்புணரி, நவ. 8: சிங்கம்புணரி அருகே கோழி திருடிவிட்டு தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரியை சேர்ந்தவர் அம்பலமுத்து. இவரது கோழிபண்ணையில் அடிக்கடி கோழிகள் திருடப்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இந்த பண்ணையில் கோழி திருட 8 பேர் வந்துள்ளனர். இவர்களை பண்ைணயில் உள்ள தொழிலாளர்கள் தடுத்துள்ளனர். அப்போது தொழிலாளர்களை திருட்டு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது குறித்து அம்பலமுத்துவிடம் தொழிலாளர்கள் கூறியதை தொடர்ந்து அம்பலமுத்து, அவரது மகன் யுவராஜ், ஆசை ஆகியோர் விசாரிக்க சென்றனர். அப்போது இவர்கள் மீதும் கோழி திருடியவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த ஆசை, யுவராஜ் ஆகியோர் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் அம்பலமுத்து கொடுத்த புகாரின் பேரில் கக்கஜி நகரைச் சேர்ந்த சூர்யா, வல்லரசு, கண்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தவமணி, பசுபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : farm ,theft ,
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...