×

கரூர் அருகே பைக் மோதி பைனான்சியர் பலி

கரூர், நவ.8: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள கார்வழியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29). பைனான்சியர். இவரது மனைவி கிருத்திகா(25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், தனது மனைவியுடன் கரூர் காந்திகிராமத்தில் உள்ள மாமானார் வீட்டுக்கு வந்தார்.நேற்று முன்தினம் மாலை தனது மனைவியுடன் கரூர்-திருச்சி சாலையில் ரஞ்சித்குமார் வாக்கிங் சென்றார். அப்போது, பின்னால் வேகமாக வந்த பைக் ரஞ்சித்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் ரஞ்சித்குமார் படுகாயமடைந்து இறந்தார். பைக்கை ஓட்டி வந்த, கரூர் ஆயுதப்படை போலீசார் பாரத் என்பவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து சம்பவம் குறித்து
பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்