×

கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 11 பேர் மீது வழக்கு

கரூர், நவ. 8: தீபாவளி அன்று காலை மற்றும் மாலை என தலா இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுதும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்காமல் அதிக சத்தத்துடன் யாராவது பட்டாசு வெடிக்கிறார்களா? என்பது குறித்து அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், கரூர் டவுன் காவல் நிலைய பகுதியில் வஉசி தெருவில் 1 வழக்கும், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லையில் உள்ள சணப்பிரட்டியில் 1 வழக்கு, வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலம்மாள்புரத்தில் 1 வழக்கு, வாங்கல் மண்மங்கலம் பகுதியில் 1 வழக்கும், வெள்ளியணை மூக்கணாங்குறிச்சி பகுதியில் 1 வழக்கு, குளித்தலை காவல் நிலைய பகுதியில் மேலப்பட்டி, இனங்கனூர் ஆகிய பகுதிகளில் 4 வழக்குகள், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய பகுதியில் கடவூரில் 1 வழக்கு, தோகைமலையில் 1 வழக்கு என மாவட்டம் முழுதும் நேற்று 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.



Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்