பொள்ளாச்சி,நவ.8: பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வாழைத்தார் வியாபாரி முருகேசன்.
இவர் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.