வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பொள்ளாச்சி,நவ.8: பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வாழைத்தார் வியாபாரி முருகேசன்.

இவர் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

 இதே பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியம் மற்றும் ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் வீட்டு கதவுகளை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்கைளயும் திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: