மனைவியை கொன்ற கணவன் கைது

பொள்ளாச்சி, நவ. 8:  பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் கொங்கு நாட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது 2வது மனைவி பிரியா இருவரும் அங்குள்ள கோழிப்பண்ணையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஈஸ்வரன் தனது மனைவி பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று குடிபோதையில் சென்ற ஈஸ்வரன் மனைவி மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரன் மனைவி பிரியாவின் தலையை சுவற்றின் மீது வேகமாக அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார், சம்பவயிடத்துக்கு வந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து தப்பியோட முயன்ற ஈஸ்வரனை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: