விவசாயிகள் மோதல் 3 பேர் படுகாயம்

மேலூர், நவ. 8: கால்வாயில் வரும் தண்ணீரை பங்கீடு செய்வதில் இரண்டு கிராம விவசாயிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஒரு போக பாசன பகுதியான மேலூர் பகுதிக்கு கடந்த ஆக.20ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் விரிவாக்க கால்வாயிலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை என விரிவாக்க கால்வாய் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.கால்வாயில் கருங்காலக்குடி பகுதிக்கு வந்த தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் அடைத்து தங்கள் கண்மாய்க்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்தது. பொதுப்பணித்துறையினர் தலையிட்டு அதை சரி செய்தனர்.

இந்த நிலையில் நேற்று வஞ்சிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கம்பாளிப்பட்டிக்கு செல்லும் தண்ணீரை அடைத்ததாக தகராறு ஏற்பட்டது. இரு கிராம விவசாயிகளும் மோதிக் கொண்டனர். இதில் கம்பாளிப்பட்டியை சேர்ந்தவர்கள் தாக்கியதில் வஞ்சிபட்டியை சேர்ந்த சேகர், குமார், குமரேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: