உசிலையில் போராட்டம் வாபஸ் வேளாண் கண்காட்சி

திருமங்கலம், நவ.8: கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை கண்காட்சி நடந்தது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வேளாண்மை அதிகாரி லீமாரோஸ் ஏற்பாட்டில் நடந்த இந்த கண்காட்சியில் பாரம்பரிய விதைகள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், சூரிய ஒளி விளக்குப்பொறி, கைத்தெளிப்பான், சொட்டுநீர் பாசன, நுண்நீர்பாசன அமைப்பு மாதிரிகள், மாடி தோட்ட மாதிரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பார்வையிட்ட விவசாயிகள் பள்ளி மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு கமுதி பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழிநுட்ப மாணவிகள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Stories: