அதிமுக 47ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்

ஓமலூர், நவ.8: ஓமலூரில் அதிமுகவின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சேலம் எம்பி பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், ‘அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் டிடிவி தினகரனின் முயற்சிகள் எதுவுமே நடக்காது. மக்களின் பேராதரவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் எண்ணங்களை அறிந்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முதல்வர் செயல்பட்டு வருகிறார். அதனால், அடுத்த தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்,’ என்றார். இந்த கூட்டத்தில், ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பச்சியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: