இளம்பிள்ளை, நவ.8: காகாபாளையத்தில் நம்மாழ்வாரின் விதைகள் அமைப்பு சார்பில், 6ம் ஆண்டாக 700 பேருக்கு 20 சகையான மூலிகைச்செடிகள் வழங்கப்பட்டது.
இளம்பிள்ளை அருகே, காகாபாளையத்தில் நம்மாழ்வாரின் விதைகள் அமைப்பு சார்பில், 6ம் ஆண்டாக 20 வகையான மூலிகை செடிகள் 700 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், மாதுளை, பெருநெல்லி, கொய்யா, வல்லாரை, நிலவேம்பு உள்ளிட்ட செடிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைப்பின் உறுப்பினர்கள் குமார், ரமேஷ், பிரபு, தங்கமணி, பாலாஜி, காசி, அகிலேஷ், கோவிந்தராஜ், செல்வம், பழனிசாமி, ஏழுமலை, நாகராஜ், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.