ஒன்றிய திமுக சார்பில் ஆயிரம் பேருக்கு புத்தாடை வழங்கல்

வாழப்பாடி, நவ.8: அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக சார்பில், தீபாவளியையொட்டி நலிந்த கட்சி தோழர்கள் ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளருமான விஜயகுமார், நலிந்த கட்சி தோழர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அவை தலைவர் ராயப்பன், ஒன்றிய பொருளாளர் வெங்கட்ராசு, முன்னால் ஒன்றிய செயலாளர்கள் முத்து, ராஜன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் செந்தில்குமார், ஒன்றிய வழக்கறிஞர் அணி வக்கீல் ஜெயச்சந்திரன், ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

Related Stories: