நெல்லை,நவ.8: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறி பாய்ந்து சென்றது.