பேட்டை, நவ. 8: சுத்தமல்லியில் இளம்பெண்ணை கேலி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (45). இவரது மகளை கொண்டாநகரம் திரிபுரிசுந்தரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் தர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஜ பாலன் வழக்கு பதிந்து தரை கைது செய்து விசாரித்து வருகிறார்.