பைக் விபத்தில் தொழிலாளி பலி

உளுந்தூர்பேட்டை, நவ. 8: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் ஆறுமுகம்(41). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் மோதியதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம்

அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல்

நிலையத்தில் ஆறுமுகத்தின் மகன் சஞ்சய்(20) கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: