வேகத்தடைகளில் விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள் அமைக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, நவ. 8:  எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள வேகத்தடைகளில் விபத்து தடுப்பு பிரதி

பலிப்பான்கள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்

குறிச்சி செல்லும் சாலையில் முக்கிய பகுதியாக உள்ளது எலவனாசூர்கோட்டை. கள்ளக்

குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் நோக்கி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் எலவனாசூர்கோட்டை வழியாக சென்று பயணிகளை தினந்தோறும் ஏற்றிச் செல்கிறது.

இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கீழப்பாளையம் கால்நடை மருத்துவமனை, பு.மலையனூர் ரோடு, திருக்கோவிலூர் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வேகத்

தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வேகத்தடை

களில் விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள் அமைக்காமலும், வேகத்தடை உள்ள பகுதி என்ற விளம்பர பலகைகள் வைக்காத காரணத்தால் இந்த வழியாக செல்பவர்கள் வேகத்தடை அருகில் சென்று திடீரென பிரேக் போடும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.இதனால் எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள வேகத்தடை

களில் விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: