×

குடியிருப்பு பகுதியில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர்

விழுப்புரம், நவ. 8:  விழுப்புரம் கணேஷ் நகர் குடியிருப்பு பகுதியில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. வீதிகள் தோறும் குழாய் மற்றும் பம்ப்பிங் அமைக்கப்பட்டு எருமணந்தாங்கல் பகுதிக்கு கொண்டுசென்று சுத்திகரிக்கப்படுகிறது.
இதனிடையே பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. இதனிடையே கணேஷ் நகர் குடியிருப்பு பகுதியில் குழாய் மூலம் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தினமும் 10 மணி நேரம் பாதாள சாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடை குழாயை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...