நற்செய்தி கூட்டம்

ஏரல்,  நவ. 8:  ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார்  திருத்தலத்தில் நற்செய்தி ஆசீர்வாதம் மற்றும் திருப்பலி நடந்தது. ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். ஏரல் சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஜான்சன் ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து திருத்தலத்தில் அன்னதானம் நடந்தது. இதில் ஏரல் ஒத்தாசை மாதா ஆலய சபை  முன்னாள் தலைவர் அந்தோனிசாமி, ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர்  வில்சன் வெள்ளையா, தொழிலதிபர்கள் ஏரல் நடேசன், எடிசன், ஒத்தாசை,  சுப்பிரமணியபுரம் ராஜசேகரன், சென்னை அந்தோணிசாமி பீற்றர், மதிவாணன் ஐசக்,  திருவழுதிநாடார்விளை லியோ, ஜவஹகர், தூத்துக்குடி பிரபாகரன், விஜயகுமார்,  மீன் ஏற்றுமதி இறக்குமதியாளர் சார்லி, சேதுக்குவாய்த்தான் டேவிட்ராஜ்,  கிங்ஸிலி, புன்னக்காயல் டெல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மரியமுத்து நாடார் நன்றி கூறினார்.

Related Stories: