இன்றும், நாளையும் தூத்துக்குடி எம்பி தொகுதி திமுக ஆலோசனை கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டங்கள் இன்றும் நாளையும் நடப்பதாக  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில்  உள்ள எம்பி தொகுதிகளுக்கு திமுக தேர்தல் பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தூத்துக்குடி எம்பி தொகுதிக்கு  தேர்தல்  பொறுப்பாளர்களாக தங்கபாண்டியன் எம்எல்ஏ, வக்கீல் மனுராஜ்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இவர்களது தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை  கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடக்கிறது. இதன்படி இன்று (8ம்தேதி)  கோவில்பட்டி  சத்யபாமா திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவிலும்,  விளாத்திகுளம் எஸ்விஎம்ஆர் கஸ்தூரி மஹாலில் மாலை 4 மணிக்கும் ஆலோசனை  கூட்டம் நடக்கிறது. நாளை (9ம்தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி  கலைஞர் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அந்தந்த  தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, கிளை, பேரூர், ஒன்றிய  நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின்  அமைப்பாளர்கள், சார்பு அணியினர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: