கடையனோடை வழியாக நாசரேத்-ஏரலுக்கு டவுன் பஸ்

நாசரேத், நவ. 8:   நாசரேத்தில் இருந்து குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு அரசு, தனியார் பஸ்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதே போல் நாசரேத்தில் இருந்து கடையனோடை, ஏரல் வழியாக தூத்துக்குடிக்கு ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால்,  நாசரேத்தில் இருந்து கடையனோடை வழியாக ஏரலுக்கு டவுண் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குரங்கணி, கடையனோடை, குளத்துக்குடியிருப்பு, தங்கையாபுரம், வெள்ளரிக்காயூரணி, பிரகாசபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர்.  எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி நாசரேத்தில் இருந்து கடையனோடை வழியாக ஏரலுக்கும், ஏரலில் இருந்து கடையனோடை வழியாக நாசரேத்திற்கும் டவுன் பஸ்கள் இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: