ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தவரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு வேலூரில் இளம்பெண்ணின் செல்போனை திருடி

வேலூர், நவ.8:வேலூரில் இளம்பெண்ணின் செல்போனை திருடி ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்ைலை கொடுத்தவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மருத்துவம் படிக்கும் 22 வயது இளம்பெண். கடந்த 3ம் தேதி வீட்டில் வைத்திருந்த செல்போனை மர்ம ஆசாமிகள் திருடி சென்று அதில் உள்ள ெதாலைபேசி எண்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் பதிவுகள் அனுப்பட்டது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.இதுகுறித்து, இளம்பெண் கடந்த 4ம் தேதி சத்துவாச்சாரி போலீசில் செல்போன் திருட்டு போனதாகவும், அந்த போன் மூலம் தனது நண்பர்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் பதிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த புகாரின் மீது தீபாவளி விடுமுறை என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட கடிதத்துடன் ‘மீடூ‘ பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலூர் டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் என 2 தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இளம்பெண்ணின் செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமி, இளம்பெண் உள்ள குடியிருப்பு பகுதியில் தான் செல்போன் இருப்பதாக டவர்கள் காட்டுகிறது. அந்த நபர் செல்போனை ஸ்சுவிட் ஆப் செய்து உள்ளதால் மர்ம ஆசாமியை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இளம்பெண் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தால் மர்ம ஆசாமி இந்த செயலில் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் பதிவு அனுப்பிய நபர் விரைவில் பிடித்து விடுவோம்’ என்றனர்.

Related Stories: