கும்பகோணம், நவ.2: கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன் தலைமை வகித்தார். கிளை மேலாளர் செந்தில்குமார், துணை மேலாளர்கள் சதீஷ்குமார், சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க மத்திய சங்க செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். டாக்டர்கள் ரிஷிகேஷ், பாஸ்கர், போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் சுரேஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். டிரைவர்கள், கண்டக்டர்கள், மற்றும் ஊழியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மத்திய சங்க பொருளாளர் ஜோசப் நன்றி கூறினார்.