குளத்தூர், நவ. 2: குளத்தூரை சேர்ந்த சேர்மன் மகன் புகழேந்தி(44). இவர் சம்பவத்தன்று மாலை குளத்தூர் அடுத்த வைப்பார் பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தூத்துக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, இவரது டூவீலர் மீது மோதியது. இதில் ்தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.