நாசரேத் கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்

நாசரேத், நவ. 2:  நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.   இதில் உள்தர உறுதிப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் மேக்ஸ்வெல், நிதிக் காப்பாளர் குளோரியம்அருள்ராஜ், கணிதத்துறைத்   தலை வர் ஜெயபாலன் கென் னடி  முன்னிலை வகித்தனர். விழாவில் என்எஸ்எஸ் அலுவலர் அந்தோணிசெல்வகுமார் தலைமையில்  பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: