சிசிடிவி கேமரா பதிவை வைத்து பிடித்தனர் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

சேலம், நவ.2: சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் கனகலட்சுமி(49). இவர் உடையாப்பட்டியில் உள்ள பெற்றோரை பார்க்க டூவீலரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார். அணைமேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாலிபர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக ேதடிவந்தனர்.  சம்பவம் நடந்த பகுதியில்  வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் நகையை பறித்து சென்ற ஆசாமியின் படம் பதிவாகியிருந்தது. இதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பிரேம்குமார்(34) என்பவர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.இந்நிலையில் நேற்று காந்திரோடு பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் அவ்வழியாக வந்த பிரேம்குமார் தப்பி ஓடினார். அவரை விரட்டிச்சென்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை பவுன் நகையும் மீட்கப்பட்டது. அஸ்தம்பட்டி உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த பிரேம்குமார், பக்கத்து கடைக்காரரை வெட்டிய வழக்கில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளது  தெரியவந்தது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

Related Stories: