சேலம் மாநகரில் 91 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு

சேலம், நவ.2: சேலம் மாநகரில் 91 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஏட்டுகளுக்கு, எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கப்படும். அதன்படி, சேலம் மாநகர காவல்துறையில் பணியாற்றிய 91 ஏட்டுகள், நேற்று எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சேலம் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் முத்துவேல், யுவராஜ், சரவணன் ஆகியோரும் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: