சிறுமி கழுத்தறுத்து கொலை வாலிபர் குண்டாசில் கைது

சேலம், நவ.2: ஆத்தூர் அருகே சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி (14). கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்த ராஜலட்சுமியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து ராஜலட்சுமியின் தாய் சின்னபொண்ணு ஆத்தூர் டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ஆத்தூர் டிஎஸ்பி காரத்திக்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து 24ம் தேதி போலீசார், தினேஷ்குமார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தினேஷ்குமாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய, ஆத்தூர் டிஎஸ்பி கார்த்திக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதை பரிசீலித்த கலெக்டர் ரோகிணி, தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

Related Stories: