இன்று விவசாயிகள் குறைதீர் முகாம்

திருமங்கலம், நவ.1: .மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட 11 தாலுகாக்களில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும், மாலையில் ‘இ அடங்கல்’ பதிவு செய்யும் சிறப்பு முகாம்களும் நடைபெறுகிறது. இ.அடங்கல் முறையில் பயிர் விளைச்சல் குறித்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். நெல் பயிருக்கு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 435 ரூபாய்க்கு பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். வறட்சி மற்றும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.27 ஆயிரம் வரையில் இழப்பீடு பெறலாம். வரும் 30ம் தேதி வரையில் பயிர்காப்பீடு செய்து கொள்ளவேண்டும். இதற்காகவே இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: