மதுரை, நவ. 1: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கருப்பு ஆடை அணிந்து வந்து மறியலில் ஈடுபட்ட 400 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலைமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு சட்டபூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை ஒரு குழந்தைக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அமைச்சர் சரோஜா, செயலாளர் மணிவாசகன் ஆகியோர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.