வேகமாக பைக் ஓட்டிய 57 பேர் மீது வழக்கு

மதுரை, நவ. 1: மதுரையில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அதிவேகமாக டூவீலரில் வந்த 57 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 53 டூவீலர்கள், ஒரு காரை பறிமுதல் செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேற்று முன்தினம் மாலை அணிவித்தனர். ரோட்டில் டூவீலர்களில் ெஹல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், 3 பேர் பயணம் செய்யக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனையும் மீறி இளைஞர்கள் டூவீலரில் அதிவேகமாக கரிமேடு, செல்லூர், தல்லாகுளம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் வலம் வந்தனர். இதில் 53 டூவீலர்கள் மற்றும் காரில் வந்த மொத்தம் 57 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 53 டூவீலர்களையும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: