×

நொகனூருக்கு விரட்டிய நிலையில் 15 காட்டு யானைகள் கோனிபள்ளத்தில் முகாம்

தேன்கனிக்கோட்டை, அக்.18:  நொகனூர் காட்டிற்கு 15 யானைகளை விரட்டிய நிலையில், அவை நேற்று கோனிபள்ளத்தில் முகாமிட்டுள்ளன. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 15 யானைகள், ஓசூர் சானமாவு வனத்தில் முகாமிட்டு அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. கடந்த வாரம் இந்த யானைகளை வனத்துறையினர் தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அதன்பின் அங்கிருந்து வெளியேறிய யானைகள் மரகட்டா காட்டில் சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் பட்டாசு வெடித்து நொகனூர் காட்டிற்குள் விரட்டினர். சாலையை கடந்து சென்ற யானைகள் அனைத்தும் நேற்று கோனிபள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றை ஜவளகிரி காட்டிற்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...