சேலம், அக்.18: சேலம் நோக்கி வந்த ஐலேண்ட் ரயிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இளம்பெண் தனியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மீட்டு, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜேனட் ஷீபா (30) என்பது தெரியவந்தது. இது குறித்து சேலம் ரயில்ேவ போலீசார், ஜேனட்ஷீபாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லி, அவர்களை சேலத்திற்கு வரவழைத்தனர். நேற்று காலை 6 மணியளவில் ஜேனட்ஷீபாவை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஜேனட்ஷீபா சேலம் கலெக்டர் ரோகிணியை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.