×

கலெக்டரை பார்க்க வந்ததாக கூறிய இளம்பெண் சேலத்தில் மீட்பு

சேலம், அக்.18: சேலம் நோக்கி வந்த ஐலேண்ட் ரயிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இளம்பெண் தனியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மீட்டு, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜேனட் ஷீபா (30) என்பது தெரியவந்தது. இது குறித்து சேலம் ரயில்ேவ போலீசார், ஜேனட்ஷீபாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லி, அவர்களை சேலத்திற்கு வரவழைத்தனர். நேற்று காலை 6 மணியளவில் ஜேனட்ஷீபாவை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஜேனட்ஷீபா சேலம் கலெக்டர் ரோகிணியை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.


4 கைதிகள் விடுதலை
சேலம், அக்.18: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் சிறையில் இருந்து நேற்று 4 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 5ம் தோட்ட சிறையில் இருந்து 2 பேரும், மத்திய சிறையில் இருந்து 2 பேரும் விடுதலையாகினர்.

Tags : young lady ,
× RELATED வாலிபருடன் இளம்பெண் ஓட்டம் போலீசில் பெற்றோர் புகார்