விதி மீறிய 5 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு

சேலம், அக்.18: சேலம் மாநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலை மற்றும் சலவை பட்டறைகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். களரம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி 3 சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2 பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ெவளியேற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, எருமாபாளையம் வனிதா என்பவருக்கு சொந்தமான ஜெயசக்தி ப்ராசஸ் யூனிட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எருமாபாளையம் செந்தில்குமார், களரம்பட்டி சுரேஷ், சீலநாயக்கன்பட்டி மணி, செவ்வாய்ப்பேட்டை வினோத்குமார் பட்டறைகளின், மின்சார இணைப்புகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

Related Stories: