×

கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.18: மத்திய, மாநில அரசை கண்டித்து சேலம் மாநகர, மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தலைமை தபால் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அபுதாகீர், சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தலைவர் வேலாயுதம் பேசினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களை சந்தித்து மனு வாங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags :
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு