சபரிமலை கோயில் விவகாரம் சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தவர் அதிரடி கைது

சேலம், அக்.18: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சேலம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டி இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த திருமுருகன் (42). என்பவர் நேற்று காலை ‘சேவ் சபரிமலா’ என ஆங்கிலத்தில் எழுதிய தட்டியை கையில் ஏந்தியவாறு சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்திற்கு வந்தார். திடீரென அவர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அங்கு வந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதா என கேட்டனர். அதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என கூறினார். இதையடுத்து அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது எனவும், இங்கிருந்து செல்லுமாறும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் மறுக்கவே, போலீசார் திருமுருகனை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: