×

குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கவல்லி, அக்.18: கெங்கவல்லியில், குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். குடிநீர் விநியோகத்துக்காக பேரூராட்சி சார்பில் 1834 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ₹70 ஆக இருந்த குடிநீர் கட்டணத்தை முறைப்படி அறிவிப்பு செய்யாமல் ₹150 ஆக உயர்த்தியுள்ளனர். இதனை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளர் அகிலன் தலைமை வகித்தார். காங்கிரஸ் பிரமுகர்கள் முகமது ஷெரீப், முருகானந்தம் முன்னிலை வகித்தனர். முருகவேள், ஷேக் மொய்தீன், வையாபுரி, தர்வேஸ், இளவரசு, வேல்முருகன், முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கெங்கவல்லி பேரூராட்சி சார்பில், எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து நேரில் கேட்கலாம் என பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றால், செயல் அலுவலர் சரியாக வருவது இல்லை. பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Siege ,Panchayat Office ,drinking water tariff hike ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...