சாயல்குடி, அக்.18: கடலாடி அரசு கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக நான்கு கட்டமாக வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாம் முடிவுற்ற நிலையில் நேற்று தேர்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு உதவி தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மேகலா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்தல் குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் அன்னதாசன் நன்றி கூறினார்.