×

38 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

மேலூர், அக். 18: மேலூர் பகுதியில் தொடரப்பட்ட கிரானைட் வழக்குகளில் 38 கிரானைட் நிறுவனங்கள் மீதான வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலூர் கோர்ட்டில் நேற்று கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி கலெக்டர் தொடர்ந்த வழக்குகளில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட மற்ற கிரானைட் நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 22 வழக்குகள் முதலில் விசாரணைக்கு வந்தது.

இதில் திருமோகூரில் பிஆர்பி நிறுவனம் அத்துமீறி கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்த ஒரு வழக்கில் அப்போதைய திருமோகூர் விஏஓ ஆனந்தம் அரசு தரப்பில் நேரில் சாட்சியம் அளித்தார். இதனை தொடர்ந்து பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட போலீசார் தொடர்ந்த 16 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. மொத்தம் உள்ள 38 வழக்குகளையும் டிச. 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி