மதுரை, அக்.18: மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு 2 பெண்கள் வந்து பல மாடல்களின் நகைகளை பார்த்தனர். இறுதியில் எதுவுமே பிடிக்கவில்லை என்று கூறி எழும்பிச் சென்றனர். இதன் பின்னர் நகைக்கடை ஊழியர்கள், நகைகளை சரி பார்த்தனர். அப்போது 33 கிராம் தங்க டாலர் செயின், 25 கிராம் தங்கத்தோடு ஆகியவை காணாமல் போனது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், மேலாளரிடம் தெரிவித்தனர். அவர், தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.