×

மாவட்டம் Postal Regn No. MA /03/2018 - 2020 மர்ம காய்ச்சலுக்கு ஒரே கிராமத்தில் 50 பேர் பாதிப்பு

மேலூர், அக். 18:மேலூர் அருகே கீழவளவு ஊராட்சியில் உள்ளது குழிச்செவல்பட்டி. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பரவலாக காய்ச்சல் இருந்தாலும் குறிப்பாக குழிச்செவல்பட்டி கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த ஊரில் காய்ச்சல் பாதித்தது சுகாதாரத் துறையினருக்கு தெரிய வில்லை. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை வைத்தே சுகாதார துறையினர் எந்தெந்த ஊர்களில் காய்ச்சல் உள்ளது என்பதை கண்டறிவார்கள். இங்கு காய்ச்சல் பரவி உள்ளது மருத்துவ துறையினருக்கு சரிவர தெரியவில்லை.

குழிச்செவல்பட்டியை சேர்ந்த அழகு(47), வீரன்(60), மலையன்(65) உட்பட 55 பேருக்கு தொடர் காய்ச்சல் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த சாந்தி கூறியதாவது, இந்த கிராமத்தை சுற்றி மிகவும் சுகாதார கேடாய் உள்ளது. இத்துடன் ஆங்காங்கே உள்ள மண்டி உள்ள புதர்களில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்த கொசு கடித்ததால் தான் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கைகால்களில் வீக்கம் ஏற்பட்டு நடக்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். சுகாதார துறையினர் பெயரளவிற்கு மாத்திரைகளை மட்டும் தராமல், இங்கேயே முகாம் அமைத்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags : District Postal Regn ,MA ,village ,
× RELATED சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு...